உத்தரபிரதேசத்தில் விமான நிலையத்தின் எல்லை தடுப்புச் சுவரில் மோதி, விமான பயிற்சி அகாடமியின் பயிற்சி விமானம் சேதமடைந்தது.
அலிகாரில் செயல்பட்டு வரும் விமான பயிற்சி அகாடமியைச் சேர்ந்த மாணவர் ஓட்டிச் சென்ற விமானத்தை, தனிபூர் விமான நிலையத்தில் தரையிறக்க முயன்றுள்ளார்.
அப்போது எல்லை தடுப்பு சுவரில் விமானம் மோதி சேதமடைந்த நிலையில், மாணவர் பாதுகாப்பாக உள்ளதாக சிவில் விமான போக்குவரத்துத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.