அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசித்து வருபவர்கள் நாட்டை விட்டு தாமாக வெளியேறியனால் அவர்களுக்கு ஆயிரம் டாலர் வழங்கப்படும் என்று அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபராகக் கடந்த ஜனவரியில் பொறுப்பேற்றதிலிருந்து ட்ரம்ப், பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
குறிப்பாக, அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் கண்டறியப்பட்டு அவர்களின் சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
இந்நிலையில், அமெரிக்காவில் வசித்து வரும் சட்டவிரோத குடியேறிகள் நாட்டை விட்டு தாமாக வெளியேறினால் அவர்களுக்கு தலா ஆயிரம் டாலர் வழங்கப்படும் என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும், சட்டவிரோத குடியேறிகள் தங்கள் சொந்த நாட்டிற்குச் செல்ல தேவையான நடவடிக்கைகளை அமெரிக்காவே செய்து தரும் என்றும் உறுதியளித்துள்ளார்.