உடல்நலக்குறைவால் காலமான நடிகர் கவுண்டமணி மனைவியின் உடல் சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகராக இருந்த கவுண்டமணியின் மனைவி சாந்தி, உடல் நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார்.
இதையடுத்து அவரது உடல் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள இல்லத்தில் நேற்று அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. திரையுலகைச் சேர்ந்த பலரும் நேரில் வந்து மரியாதை செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து சாந்தியின் உடல் பெசன்ட் நகர் மின் மயானத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது. இறுதிச் சடங்கில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.