தங்கம் விலை ஒரே நாளில் 2வது முறையாக உயர்ந்து சவரன் 72 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேசச் சந்தையில் விலை உயர்வு காரணமாகத் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. அந்த வகையில் இன்று ஒரே நாளில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ஆயிரத்து 600 ரூபாய் உயர்ந்துள்ளது.
காலை நேரத்தில் சவரனுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கம், 72 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் மாலை நேரத்தில் மீண்டும் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.
அதன்படி ஒரு கிராம் தங்கத்தின் விலை 75 ரூபாய் உயர்ந்து 9 ஆயிரத்து 100 ரூபாய்க்கும், ஒரு சவரன் தங்கத்தின் விலை 600 ரூபாய் உயர்ந்து 72 ஆயிரத்து 800 ரூபாய்க்கும் விற்பனையானது. ஒரே நாளில் 2வது முறையாகத் தங்கத்தின் விலை உயர்ந்ததால் நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.