பஹால்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காமில் உள்ள சுற்றுலா தலத்தில் கடந்த 22ம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர்.
இதற்கு தக்க பதிலடி தரப்படும் என பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். அதனை உறுதிப்படுத்தும் விதமாக பாதுகாப்பு துறை அமைச்சர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், ராணுவ தலைமை தளபதி மற்றும் முப்படை தளபதிகளுன் அவர் ஆலோசனை நடத்தி வந்தார்.
இந்நிலையில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது. ‘ ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் தாக்குதல் நடத்தப்பட்டுள்ள. பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்பட்டை குண்டுமழை பொழிந்தது.
இந்த தாக்குதலை தொடர்ந்து நீதி நிலை நிறுத்தப்பட்டதாக இந்திய ராணுவம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதல், நீதி நிறைநிறுத்தப்பட்டது, ஜெய் ஹிந்த், ஆப்பரேஷன் சிந்தூர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆபரேஷன் சிந்தூர் குறித்து இன்று காலை மத்திய அரசு அல்லது பாதுகாப்புப்படை தரப்பில் விளக்கம் அளிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.