பாகிஸ்தான் எல்லையில் ஒன்பது ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகளை நிறுவப் பஞ்சாப் அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மான் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாகிஸ்தான் உடனான பஞ்சாப் எல்லையில் 9 இடங்களில் ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகள் நிறுவ முடிவு செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் எல்லை தாண்டிய அத்துமீறல்களைச் சமாளிக்கும் வகையில் இந்த ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகள் அமைக்கப்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.