இந்தியாவும், பாகிஸ்தானும் சண்டை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் இரு நாட்டு ராணுவ அதிகாரிகளும் இன்று பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. அதன் தொடர்ச்சியாக பாகிஸ்தானும் தாக்குதலில் ஈடுபடவே போர் பதற்றம் அதிகரித்தது. குடியிருப்புகள் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்திய நிலையில், இந்தியாவும் தக்க பதிலடி கொடுக்க தொடங்கியது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரு தரப்பும் சண்டை நிறுத்ததிற்கு ஒப்புக்கொண்டன. அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து இரு நாட்டு ராணுவ அதிகாரிகளும் இன்று பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.