பொய் சொல்லி சிக்கிய பாகிஸ்தான் : அப்பாவி என கூறப்பட்டவர் தீவிரவாதி என நிரூபணம்!
Aug 17, 2025, 07:25 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பொய் சொல்லி சிக்கிய பாகிஸ்தான் : அப்பாவி என கூறப்பட்டவர் தீவிரவாதி என நிரூபணம்!

Web Desk by Web Desk
May 13, 2025, 07:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆபரேஷன் சிந்தூரில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் இறுதிச் சடங்கு பிரார்த்தனைக்குத் தலைமை தாங்கியவர் பயங்கரவாதி அல்ல அப்பாவி என்று  பாகிஸ்தான் கொடுத்த ஆதாரமே, அவர் உலகளாவிய பயங்கரவாதி என்பதை  நிரூபித்து உள்ளது. யார் அந்த பயங்கரவாதி ? பாகிஸ்தான் கொடுத்த ஆதாரம் என்ன ? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக, ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில், பயங்கரவாதிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை இந்தியா எடுத்தது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள 9 பயங்கரவாத தளங்கள் மற்றும் 21 பயங்கரவாத பயிற்சி முகாம்கள் குறிவைத்து முற்றிலுமாக அழிக்கப்பட்டது.

இந்த தாக்குதலில், லஷ்கர்-இ-தொய்பா,ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன்  பயங்கரவாத அமைப்புக்களின் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப் பட்டனர்.
லஷ்கர் இ தொய்பா பொறுப்பாளர் முடாசர் காதியன் காஸ் என்ற அபு ஜுண்டல், ஜெய்ஷ் இ முகமது அமைப்பைச் சேர்ந்த முகமது யூசுப் அஸார் என்கிற உஸ்தாத், காலித் என்கிற அபு ஆகாஷா, ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் பொறுப்பாளர் ஹபீஸ் முகமது ஜமீல், ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தளபதி முகமது ஹசன் கான் ஆகியோர் ஆப்ரேஷன் சிந்தூரில் பலியான முக்கிய பயங்கரவாதிகள் ஆவார்கள்.

பாகிஸ்தான் தேசியக் கொடி போர்த்தப் பட்ட  பயங்கரவாதிகளின் சவப்பெட்டிகளுக்கு, பாகிஸ்தான் ராணுவத்தின் தலைமை தளபதி ஜெனரல் அசிம் முனீர், பாகிஸ்தான் பஞ்சாப் மாகாண முதல்வர் மரியம் நவாஸ் சார்பாக மலர்வளையம் வைத்து மரியாதை செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ராணுவ மரியாதையுடன் நடந்துள்ளது  பயங்கரவாதிகளின் இறுதிச் சடங்கு.

உலகளாவிய பயங்கரவாதியான ஹபீஸ் அப்துல் ரவூஃப் தலைமையில் நடந்த இறுதிச் சடங்கில், லெப்டினன்ட் ஜெனரல் ஃபயாஸ் ஹுசைன் ஷா,மேஜர் ஜெனரல் ராவ் இம்ரான் சர்தாஜ், பிரிகேடியர் முகமது ஃபுர்கான் ஷபீர்; பஞ்சாப் மாநில காவல் ஆய்வாளர் உஸ்மான் அன்வர் மற்றும் பஞ்சாப் மாகாண சட்டமன்ற உறுப்பினர் மாலிக் சோஹைப் அகமது பெர்த் மற்றும் ராணுவத் தளபதிகள், வீரர்கள் உட்படப் பாகிஸ்தானின் அரசின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

பாகிஸ்தானின் SAMAA TV காட்டிய  பயங்கரவாதிகளின் இறுதிச் சடங்கின் வீடியோ  சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது. பயங்கரவாதிகளுக்கு இராணுவ உயர் அதிகாரிகள் முன்னிலையில் அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடத்தப்படுவது ஏன்? என்று இந்திய வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி கேள்வி எழுப்பினார்.

மேலும், அமெரிக்காவால் உலகளாவிய பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட லஷ்கர்-இ-தொய்பாவின் உயர்மட்ட தளபதியான ஹபீஸ் அப்துல் ரவூஃப், பலியான பயங்கரவாதிகளின் இறுதிச் சடங்குகளைத் தலைமையேற்று வழிநடத்தும் புகைப்படத்தையும் விக்ரம் மிஸ்ரி வெளியிட்டார்.

இந்நிலையில்,அப்பாவி இஸ்லாமியரான ரவூஃப்புக்கும் பயங்கரவாதத்துடன் எந்த தொடர்பும் இல்லை என்று பாகிஸ்தான் ராணுவத்தின் முதன்மை செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரிப் சவுத்ரி கூறிய நிலையில், ரவூஃப் ஒரு உலகளாவிய லஷ்கர் இ தொய்பாவின் பயங்கரவாதி என்பதற்கான உறுதியான ஆதாரங்கள் வெளியாகியுள்ளன.

பாகிஸ்தான் வழங்கிய  ரவூஃப்பின் அடையாளச் சான்று தகவல்கள், அமெரிக்க அரசு பதிவு செய்துள்ள  ஹபீஸ் அப்துல் ரவூப்பின் விவரங்களுடன் சரியாகப் பொருந்துகின்றன. ரவூப்பின் பிறந்த தேதி 1973 மார்ச் 25 என்றும், அவரது தேசிய அடையாள எண் 35202-54004-13-9 என்றும் பாகிஸ்தான் ஆதாரம் வெளியிட்டது. ரவூப்பை பயங்கரவாதி என்று அமெரிக்கா அறிவித்துள்ள தரவுகளிலும் இந்த தேசிய அடையாள எண்ணும் பெயரும்  ஒத்துப்போகிறது.

2006 ஆம் ஆண்டு நடந்த மும்பை  இரயில் குண்டு வெடிப்பு , 2008 ஆம் ஆண்டு நடந்த மும்பை தாக்குதல்   உட்பட, லஷ்கர்-இ-தொய்பாவின் நடவடிக்கைகளை எளிதாக்குவதில் ரவூப் ஈடு பட்டிருந்தார்.  ஏற்கெனவே, 2001 ஆம் ஆண்டு,லஷ்கர் இ தொய்பாவை ஒரு வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாகவும், அதன் தலைவர் ஹபீஸ் அப்துல் ரவூப்பை உலகளாவிய பயங்கரவாதியாகவும் அமெரிக்கா அறிவித்தது.

தொடர்ந்து, லஷ்கர்-இ-தொய்பாவின் நிதி மற்றும் தளவாட வலையமைப்பில் முக்கிய பங்கு வகித்த லஷ்கர் இ தொய்பா தலைவர் ஹபீஸ் அப்துர் ரவூப்பை, 2010 ஆம் ஆண்டில்,  சிறப்பு உலகளாவிய பயங்கரவாதியாக (SDGT) அமெரிக்கா  அறிவித்தது. மேலும், அமெரிக்காவில் உள்ள அவரது சொத்துக்கள் அனைத்தும் முடக்கப்பட்டன.

ஒரு அப்பாவியாக ஹபீஸ் அப்துர்  ரவூஃப்பை  சித்தரிக்க முயன்ற நிலையில், பாகிஸ்தான் கொடுத்த ஆதாரங்கள் மூலமாகவே,  அவர் அமெரிக்காவின் சிறப்புப் பட்டியலில் உள்ள  உலகளாவிய பயங்கரவாதி என்பது நிரூபணம் ஆகியுள்ளது.

Tags: Indiapakistanindia pakistanஆபரேஷன் சிந்தூர்Pakistan caught lying: The person who was said to be innocent is proven to be a terrorist
ShareTweetSendShare
Previous Post

ஸ்டாலின்தான் வெட்கித் தலைகுனிய வேண்டும் : எடப்பாடி பழனிசாமி

Next Post

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேல்முறையீடு செய்தாலும் தண்டனை உறுதி செய்யப்படும் :  சிபிஐ தரப்பு வழக்கறிஞர்!

Related News

புதிய மைல் கல்லை எட்டிய NASA – ISRO கூட்டு முயற்சி : NISAR ஆண்டனா சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தம்!

வான்வழி அச்சுறுத்தல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இந்தியா… ! : ‘GAME CHANGER’ ஆக களமிறக்கப்படும் R-37 VYMPEL ஏவுகணை?

தோல்வியில் முடிந்த அலாஸ்கா சந்திப்பு : இந்தியாவுக்கு மேலும் வரியா? நடக்கப்போவது என்ன?

அழிவை நோக்கி பயணிக்கும் மனித குலம்…? : எலிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வின் அதிர்ச்சி முடிவு!

லாஸ் வேகாஸை புரட்டிப்போட்ட அதிபர் டிரம்பின் நடவடிக்கை : பொருளாதார நெருக்கடியால் திண்டாடும் மக்கள்!

அலாஸ்கா சந்திப்பில் வெற்றி யாருக்கு? – அங்கீகாரம் பெற்ற புதின் – திகைத்து நின்ற ட்ரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

CHAT GPT பரிந்துரையால் தீவிர நோயாளியான முதியவர் : அரியவகை 19-ம் நூற்றாண்டின் நோயால் பாதிப்பு!

அசத்தும் தொழில் நிறுவனம் : துணிக்கழிவுகள் மூலம் உருவ பொம்மைகள்!

42 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் இல.கணேசன் உடல் தகனம்!

கோவை : இஸ்கானில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி சிறப்பு அலங்காரம்!

தொடர் விடுமுறையையொட்டி ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

ஆந்திரா : பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருந்த நபர் கைது!

செப்டம்பர் 1ம் தேதி முதல் பிஎம்டபிள்யூ கார்களின் விலை உயர்வு!

நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய விருதை தனக்கு தானே அறிவித்துக் கொண்டிருக்கிறார் ஆசிம் முனீர்!

நாமக்கல் : பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களால் மக்கள் அச்சம்!

டிரம்ப் – புதின் பேச்சுவார்த்தை : இந்தியா வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies