ஏவுகணைகளின் ராஜா ஆகாஷ் : வான் சுதர்சன கவசத்தால் 100 % வான் பாதுகாப்பு!
Mar 15, 2026, 08:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ஏவுகணைகளின் ராஜா ஆகாஷ் : வான் சுதர்சன கவசத்தால் 100 % வான் பாதுகாப்பு!

Murugesan M by Murugesan M
May 13, 2025, 08:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தான் ஏவிய ஏவுகணைகளை எல்லாம் வானிலேயே தவிடு பொடியாக்கிய ஆகாஷ் ஏவுகணையின் தாக்கும் திறனைப் பார்த்து உலக வல்லரசு நாடுகளே வியப்பில் உள்ளன. ஆப்ரேஷன் சிந்தூரின் அபார வெற்றிக்குக் காரணமான ஆகாஷ் ஏவுகணைத் திட்டம் பற்றியும், அதை உருவாக்கிய DRDO விஞ்ஞானிகளின் அயராத உழைப்பும், அர்ப்பணிப்பும் பற்றியும் இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக, ஆப்ரேஷன் சிந்தூர் என்ற இராணுவ நடவடிக்கையை இந்தியா தொடங்கியது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள 9 பயங்கரவாத தளங்கள் உட்பட  21 பயங்கரவாத பயிற்சி முகாம்கள் தரைமட்டமாக்கப் பட்டன. நூற்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப் பட்டனர்.

இதற்குப் பின், இந்திய ராணுவ உள்கட்டமைப்பைக் குறிவைத்தும், மேற்கு எல்லை முழுவதும் இந்திய வான்வெளியில் அத்துமீறி பாகிஸ்தான் தாக்குதல் நடத்த முயற்சி செய்தது.அமிர்தர்ஸ பொற்கோயில் உட்பட இந்தியாவின் 36 இடங்களைக் குறி வைத்து, சுமார் 400 ட்ரோன்களையும் ஏவுகணைகளையும் பாகிஸ்தான் ஏவியது.

இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்புகளைச் சோதிக்கவும், உளவு பார்க்கவும், இந்தியாவின் முக்கிய நகரங்களைத் தாக்கவும் எண்ணிய பாகிஸ்தான், பெரிய அளவிலான வான்வழி ஊடுருவல் முயற்சிகளை மேற்கொண்டது. S 400, AKASH, SPYDER, MRSAM,  BARAK 8 ஆகிய வான் பாதுகாப்பு அமைப்புகள், பாகிஸ்தான் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களைக் கண்டறிந்து, இடைமறித்து அழித்துள்ளன. சொல்லப்போனால், நாட்டின் வான் பரப்புக்கு ஒரு கவசமாக நின்று பாதுகாத்துள்ளன. இந்தியாவைத் தாக்கப் பாகிஸ்தான் எடுத்த அனைத்து முயற்சிகளும் முறியடிக்கப் பட்டன.

இவற்றில், இந்தியாவின் மேற்கு எல்லையைப் பாதுகாப்பதில், முழுவதும்  உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட  ஆகாஷ் ஏவுகணை அமைப்பு முக்கிய பங்கு வகித்தது. ஆகாஷ்-குறுகிய தூரத் தரையிலிருந்து வான் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பாகும். வெறும் 20 நொடிகளில் 30 கிலோமீட்டர்  தூரம் சென்று தாக்கும் வல்லமை கொண்ட ஆகாஷ், செங்குத்தாக 18 கிலோமீட்டர் உயரம் வரை சென்று தாக்கும் திறன் கொண்டதாகும்.

மணிக்கு 3,000 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் ஆகாஷ், ஒரே நேரத்தில் 12 இலக்குகளைத் தாக்கும் வல்லமை கொண்டதாகும். சுமார் 2000 சதுர கிலோமீட்டர் வான் பரப்பைப் பாதுகாக்கும் வகையில் இந்த ஆகாஷ் வான் பாதுகாப்பு அமைப்பு வடிவமைக்கப் பட்டுள்ளது.

ஆகாஷ் ஏவுகணையை, DRDO-வின் விஞ்ஞானி டாக்டர் பிரகலாத் ராமராவ் தான் உருவாக்கியுள்ளார். முன்னாள் குடியரசுத் தலைவரும், இந்தியாவின் ஏவுகணை நாயகனும் ஆன APJ அப்துல் கலாம் தான், டாக்டர் பிரகலாத் ராமராவை ஆகாஷ் ஏவுகணைத் திட்டத்தின் இயக்குனராக தேர்ந்தெடுத்தார்.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட ஆகாஷ் திட்டத்தில் மிகக் குறைந்த வயதுடைய இயக்குனராக பிரகலாத் பணியாற்றியுள்ளார். 1994 ஆம் ஆண்டு 300 கோடி ரூபாய் செலவில் ஆகாஷ் ஏவுகணைத் திட்டம் தொடங்கப்பட்டது. பல தோல்விகளுக்குப் பிறகு, பல சவால்களுக்குப் பிறகு, பல சோதனைகளுக்குப் பிறகு ஆகாஷ் வெற்றிகரமாக உருவாக்கப்பட்டது.

பாலகோட் தாக்குதலையடுத்து, கூடுதல் வான் பாதுகாப்பு அமைப்புகள் தேவை என்ற நிலையில், 2019ம் ஆண்டு, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, இந்திய விமானப்படைக்கு 5,000 கோடி ரூபாய்  மதிப்பிலான ஆகாஷ் ஏவுகணைத் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கியது. மேலும், 17,000 கோடிக்கு மேல் மதிப்புள்ள ராணுவ டெண்டரை, ஆகாஷுக்கு ஆதரவாக மத்திய அரசு ரத்து செய்தது.

சூப்பர்சோனிக் F-16 போர் விமானங்கள் போன்ற அதிவேக அச்சுறுத்தல்களைத் தடுக்கும் வகையில் ஆகாஷ் ஏவுகணைத் திட்டம் பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் மறு உருவாக்கம் செய்யப்பட்டது. வான்வழியாக எதிரிகள் நடத்தும் தாக்குதல்களை எதிர்கொள்ள ஆகாஷ் ஏவுகணைகள் உருவாக்கப்பட்டன என்று கூறியுள்ள விஞ்ஞானி டாக்டர் பிரகலாத் ராமராவ், ஆகாஷை உருவாக்குவதில் தானும் பணியாற்றி இருப்பதை நினைக்கும் போது பெருமிதமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

தற்போது 78 வயதாகும்,  டாக்டர் பிரகலாத் ராமராவ், பாகிஸ்தானின் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஆகாஷ் துரத்தித் துரத்தி தாக்கி அழித்த நாள் தான் தனது வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியான நாள் என்றும் தெரிவித்துள்ளார். 100 சதவீதம் பாகிஸ்தான் ஏவிய ஏவுகணைகளை வானிலேயே இடைமறித்து அழிக்கும் ஆகாஷ் ஏவுகணையின் திறனை உலகமே பாராட்டி உள்ளது.

ரஷ்யாவின் S-400 க்கு இணையாக எதிரிகளின் ஏவுகணைகளைத் துல்லியமாகத் தாக்கிய ஆகாஷ்,நாட்டையே பாதுகாத்துள்ளது. ஒவ்வொரு இரவிலும் நமது பாதுகாப்பைப் பற்றி கொஞ்சமும் கவலைப் படாமல் தூங்கச் செல்கிறோம் என்றால், எல்லையைப் பாதுகாக்கும் துணிச்சலான இராணுவ வீரர்களே காரணம். கூடுதலாக , இந்திய வான் எல்லையைப் பாதுக்காக்கும் ஆகாஷ் போன்ற ஏவுகணையை உருவாக்கிய இந்திய விஞ்ஞானிகளே காரணம். அவர்களுக்கு நன்றி சொல்வது ஒவ்வொரு இந்தியரின் கடமையாகும்.

Tags: the king of missiles: 100% air defense with the Van Sudarshana armorஏவுகணைகளின் ராஜா ஆகாஷ்Indiapakistanindian armyAkash
ShareTweetSendShare
Previous Post

பாகிஸ்தான் அணு ஆயுத மிரட்டலுக்கு அடிபணிய மாட்டோம் : பிரதமர் மோடி

Next Post

உலகின் ஒரே சூப்பர் சோனிக் குரூஸ் : பாகிஸ்தானை கதிகலங்க வைத்த பிரம்மோஸ்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

இங்கிலாந்தில் பெண்ணை உருளைக்கிழங்கு என கிண்டல் செய்த நபருக்கு 29 லட்சம் ரூபாய் அபராதம்!

வாடகைக்கு விடப்பட்ட தொழிலதிபர் ரத்தன் டாடாவின் வீடு!

ஈரான் இஸ்ரேல் போரால் கடும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் கச்சா எண்ணெய் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies