இந்திய அரசின் செயல்பாடுகளை உளவு பார்த்த பாகிஸ்தான் தூதரக ஊழியரை
உடனடியாக நாட்டைவிட்டு வெளியேறுமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
பஹல்காம் தாக்குதல் சம்பவத்தின் எதிரொலியாக டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இதனை தொடர்ந்து இருநாடுகளுக்கும் இடையே போர் வெடித்த நிலையில், பேச்சுவார்த்தைக்கு பிறகு கடந்த 10-ம் தேதி போர் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் டெல்லி தூதரகத்தில் பணிபுரிந்த ஊழியர்கள் ஒருவர், தூதரக பணியை கவனிக்காமல் இந்திய அரசின் செயல்பாடுகளை உளவு பார்த்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதனால், அவர் உடனடியாக இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என மத்திய அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.