கிருஷ்ணகிரியில் கொள்முதல் செய்யப்படும் நெல்லின் விலையை குவிண்டாலுக்கு 4 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெரியமுத்தூர், அவதானப்பட்டி, தளிஹள்ளி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட நெல் அமோக விளைச்சல் கண்டுள்ளது.
தொடர்ந்து அப்பகுதிகளில் நெல் அறுவடை பணிகள் தொடங்கியுள்ள நிலையில், விலைவாசி உயர்வைக் கருத்தில் கொண்டு நெல் குவிண்டாலுக்கு 4 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி கொள்முதல் செய்ய வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.