தெய்வசெயலின் குற்றச்செயல் - கதறும் பெண் : திமுக நிர்வாகிகளுக்கு இரையாக்க முயற்சி?
Jan 14, 2026, 05:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தெய்வசெயலின் குற்றச்செயல் – கதறும் பெண் : திமுக நிர்வாகிகளுக்கு இரையாக்க முயற்சி?

Murugesan M by Murugesan M
May 18, 2025, 07:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருமண ஆசைகாட்டி திமுகவின் முக்கிய பிரமுகர்களுக்குத் தன்னை இறையாக்க முயற்சித்ததாக அரக்கோணத்தைச் சேர்ந்த திமுக நிர்வாகி தெய்வச்செயல் மீது இளம்பெண் ஒருவர் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண்களைத் திருமணம் செய்து தவறான செயலுக்குப் பயன்படுத்தும் தெய்வச்செயல் குறித்தும் அவரால பாதிக்கப்பட்ட பெண் குறித்தும் இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் மாணவியை, ஏற்கனவே திருமணமானதை மறைத்து திமுகவின் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் தெய்வச்செயல் காதலிப்பதாகக் கூறி கடந்த ஜனவரி மாதம் 31 ஆம் தேதி சோளிங்கர் கரிக்கல் கோயிலில் வைத்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.

திருமணமான சில மாதங்களில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் உதவியாளர், சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரப்பா ஆகியோரிடம் இப்பெண்ணை அறிமுகம் செய்து கல்லூரி படிப்பை முடித்தவுடன் நீங்கள் தான் வேலை வாங்கித் தர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

அடுத்த சில மாதங்களில் இரவு நேரத்தில் தன்னை அடித்துத் துன்புறுத்தி, திமுக நிர்வாகிகளின் வீட்டிற்குச் செல்ல வேண்டும் என வற்புறுத்தியதாகப் பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.

ஒருகட்டத்தின் தெய்வச்செயலின் தொல்லையைத் தாங்க முடியாத இளம்பெண் அரக்கோணம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் தெய்வச்செயலோ நான் திமுகவில் பொறுப்பில் உள்ளவன் என்றும் வழக்கறிஞர் என்றும் தெனாவட்டாக கூறியதோடு தன் மீதான புகாரை யாரும் ஏற்க மாட்டார்கள் எனக் கூறியுள்ளார். அவர் சொன்னதைப் போலவே பாதிக்கப்பட்ட பெண்ணின்  புகாரும் ஏற்கப்படவில்லை.

தன்னை வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்த திமுக நிர்வாகி தெய்வச்செயல், ஏற்கனவே திருமணமானவர் என்பதும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்குத் தெரிய வந்துள்ளது. அதுவும் அரசியல் பின்புலமோ, பண பின்புலமோ இல்லாத பெண்களைப் பார்த்துத் தேர்ந்தெடுத்து மிரட்டி திருமணம் செய்து கொள்வதையே தெய்வச்செயல் வாடிக்கையாகவே வைத்திருப்பதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

காவல்துறை தொடங்கி அனைவரிடமும் தனக்கு நேர்ந்த கொடுமையைச் சொன்ன பின்பும் யாரும் உதவிக்கு வராத நிலையில் வேறு வழியின்றி சென்னைக்கு வந்து டிஜிபியை சந்தித்துப் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்திருக்கிறார்.

திமுகவின் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என முக்கிய தலைவர்களுடன் தெய்வச்செயல் எடுத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ள நெட்டிசன்கள், ஆளுங்கட்சி நிர்வாகியாக இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாமா என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Tags: DMKA crime of God - an attempt to prey on the screaming woman DMK executives?கதறும் பெண்இளம்பெண்
ShareTweetSendShare
Previous Post

விண்ணில் ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட் தொழில்நுட்ப கோளாறு!

Next Post

ராகுல் காந்தி குற்றச்சாட்டுக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் மறுப்பு!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies