தெய்வசெயலின் குற்றச்செயல் - கதறும் பெண் : திமுக நிர்வாகிகளுக்கு இரையாக்க முயற்சி?
Nov 16, 2025, 09:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தெய்வசெயலின் குற்றச்செயல் – கதறும் பெண் : திமுக நிர்வாகிகளுக்கு இரையாக்க முயற்சி?

Web Desk by Web Desk
May 18, 2025, 07:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருமண ஆசைகாட்டி திமுகவின் முக்கிய பிரமுகர்களுக்குத் தன்னை இறையாக்க முயற்சித்ததாக அரக்கோணத்தைச் சேர்ந்த திமுக நிர்வாகி தெய்வச்செயல் மீது இளம்பெண் ஒருவர் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண்களைத் திருமணம் செய்து தவறான செயலுக்குப் பயன்படுத்தும் தெய்வச்செயல் குறித்தும் அவரால பாதிக்கப்பட்ட பெண் குறித்தும் இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் மாணவியை, ஏற்கனவே திருமணமானதை மறைத்து திமுகவின் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் தெய்வச்செயல் காதலிப்பதாகக் கூறி கடந்த ஜனவரி மாதம் 31 ஆம் தேதி சோளிங்கர் கரிக்கல் கோயிலில் வைத்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.

திருமணமான சில மாதங்களில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் உதவியாளர், சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரப்பா ஆகியோரிடம் இப்பெண்ணை அறிமுகம் செய்து கல்லூரி படிப்பை முடித்தவுடன் நீங்கள் தான் வேலை வாங்கித் தர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

அடுத்த சில மாதங்களில் இரவு நேரத்தில் தன்னை அடித்துத் துன்புறுத்தி, திமுக நிர்வாகிகளின் வீட்டிற்குச் செல்ல வேண்டும் என வற்புறுத்தியதாகப் பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.

ஒருகட்டத்தின் தெய்வச்செயலின் தொல்லையைத் தாங்க முடியாத இளம்பெண் அரக்கோணம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் தெய்வச்செயலோ நான் திமுகவில் பொறுப்பில் உள்ளவன் என்றும் வழக்கறிஞர் என்றும் தெனாவட்டாக கூறியதோடு தன் மீதான புகாரை யாரும் ஏற்க மாட்டார்கள் எனக் கூறியுள்ளார். அவர் சொன்னதைப் போலவே பாதிக்கப்பட்ட பெண்ணின்  புகாரும் ஏற்கப்படவில்லை.

தன்னை வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்த திமுக நிர்வாகி தெய்வச்செயல், ஏற்கனவே திருமணமானவர் என்பதும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்குத் தெரிய வந்துள்ளது. அதுவும் அரசியல் பின்புலமோ, பண பின்புலமோ இல்லாத பெண்களைப் பார்த்துத் தேர்ந்தெடுத்து மிரட்டி திருமணம் செய்து கொள்வதையே தெய்வச்செயல் வாடிக்கையாகவே வைத்திருப்பதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

காவல்துறை தொடங்கி அனைவரிடமும் தனக்கு நேர்ந்த கொடுமையைச் சொன்ன பின்பும் யாரும் உதவிக்கு வராத நிலையில் வேறு வழியின்றி சென்னைக்கு வந்து டிஜிபியை சந்தித்துப் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்திருக்கிறார்.

திமுகவின் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என முக்கிய தலைவர்களுடன் தெய்வச்செயல் எடுத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ள நெட்டிசன்கள், ஆளுங்கட்சி நிர்வாகியாக இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாமா என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Tags: DMKA crime of God - an attempt to prey on the screaming woman DMK executives?கதறும் பெண்இளம்பெண்
ShareTweetSendShare
Previous Post

விண்ணில் ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட் தொழில்நுட்ப கோளாறு!

Next Post

ராகுல் காந்தி குற்றச்சாட்டுக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் மறுப்பு!

Related News

பீகார் தேர்தலில் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி : படுகுழியில் விழுந்த ஆர்ஜேடி!

பிரச்சார பீரங்கியாக வெடித்த யோகி ஆதித்யநாத் : தண்ணீர் துப்பாக்கியாக மாறிப்போன அகிலேஷ் யாதவ்

வெடித்து சிதறிய ஜம்மு – காஷ்மீர் காவல்நிலையம் : சதிச்செயல் இல்லை என உள்துறை அமைச்சகம் விளக்கம்!

தடை விதிக்கப்பட்ட செயலியை பயன்படுத்தியது அம்பலம் : THREEMA APP-ல் திட்டம் தீட்டிய தீவிரவாதிகள்!

காசு கொடுத்து லாபி செய்தது அம்பலம் : ட்ரம்பை சந்திக்க ரூ.444 கோடி செலவிட்ட பாகிஸ்தான்!

முடிவுக்கு வந்த பிரசாந்த் கிஷோரின் அரசியல் எதிர்காலம்!

Load More

அண்மைச் செய்திகள்

தீவிரவாத தாக்குதல் காரணமாக மூடப்பட்ட டெல்லி செங்கோட்டை – 5 நாட்களுக்குப் பிறகு இன்று மீண்டும் திறப்பு!

டெல்லி கார் குண்டு வெடிப்பு – உமர் முகமது செல்போன் பயன்படுத்தும் வீடியோ வெளியானது!

பீகாரில் ஆட்சி அமைப்பது தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை!

பீகாரில் இண்டி கூட்டணி மண்ணை கவ்வ காரணமான திமுக?

மாநிலங்களில் காங்கிரசுக்கு சரிந்தது செல்வாக்கு : பீகார் தேர்தலில் இதுவரை இல்லாத வரலாற்று தோல்வி!

ஓட்டம் பிடித்த சுந்தர்.சி : தெறிக்க விடும் மீம்ஸ்…!

எப்போது நிறைவேறும் அத்திக்கடவு – அவிநாசி திட்டம்? : ஏங்கித் தவிக்கும் விவசாயிகள்!

எட்டிப் பிடிக்க முடியாத தங்கம் : என்னவாகும் பொற்கொல்லர்களின் எதிர்காலம்?

மினிமம் பட்ஜெட்….மிடில் கிளாஸ் ஃபேமிலி : மனதை கவர்ந்த மக்கள் இயக்குனர்!

வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies