தெய்வசெயலின் குற்றச்செயல் - கதறும் பெண் : திமுக நிர்வாகிகளுக்கு இரையாக்க முயற்சி?
Sep 4, 2026, 08:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தெய்வசெயலின் குற்றச்செயல் – கதறும் பெண் : திமுக நிர்வாகிகளுக்கு இரையாக்க முயற்சி?

Murugesan M by Murugesan M
May 18, 2025, 07:11 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திருமண ஆசைகாட்டி திமுகவின் முக்கிய பிரமுகர்களுக்குத் தன்னை இறையாக்க முயற்சித்ததாக அரக்கோணத்தைச் சேர்ந்த திமுக நிர்வாகி தெய்வச்செயல் மீது இளம்பெண் ஒருவர் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண்களைத் திருமணம் செய்து தவறான செயலுக்குப் பயன்படுத்தும் தெய்வச்செயல் குறித்தும் அவரால பாதிக்கப்பட்ட பெண் குறித்தும் இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் மாணவியை, ஏற்கனவே திருமணமானதை மறைத்து திமுகவின் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் தெய்வச்செயல் காதலிப்பதாகக் கூறி கடந்த ஜனவரி மாதம் 31 ஆம் தேதி சோளிங்கர் கரிக்கல் கோயிலில் வைத்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.

திருமணமான சில மாதங்களில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் உதவியாளர், சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரப்பா ஆகியோரிடம் இப்பெண்ணை அறிமுகம் செய்து கல்லூரி படிப்பை முடித்தவுடன் நீங்கள் தான் வேலை வாங்கித் தர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

அடுத்த சில மாதங்களில் இரவு நேரத்தில் தன்னை அடித்துத் துன்புறுத்தி, திமுக நிர்வாகிகளின் வீட்டிற்குச் செல்ல வேண்டும் என வற்புறுத்தியதாகப் பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.

ஒருகட்டத்தின் தெய்வச்செயலின் தொல்லையைத் தாங்க முடியாத இளம்பெண் அரக்கோணம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் தெய்வச்செயலோ நான் திமுகவில் பொறுப்பில் உள்ளவன் என்றும் வழக்கறிஞர் என்றும் தெனாவட்டாக கூறியதோடு தன் மீதான புகாரை யாரும் ஏற்க மாட்டார்கள் எனக் கூறியுள்ளார். அவர் சொன்னதைப் போலவே பாதிக்கப்பட்ட பெண்ணின்  புகாரும் ஏற்கப்படவில்லை.

தன்னை வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்த திமுக நிர்வாகி தெய்வச்செயல், ஏற்கனவே திருமணமானவர் என்பதும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்குத் தெரிய வந்துள்ளது. அதுவும் அரசியல் பின்புலமோ, பண பின்புலமோ இல்லாத பெண்களைப் பார்த்துத் தேர்ந்தெடுத்து மிரட்டி திருமணம் செய்து கொள்வதையே தெய்வச்செயல் வாடிக்கையாகவே வைத்திருப்பதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

காவல்துறை தொடங்கி அனைவரிடமும் தனக்கு நேர்ந்த கொடுமையைச் சொன்ன பின்பும் யாரும் உதவிக்கு வராத நிலையில் வேறு வழியின்றி சென்னைக்கு வந்து டிஜிபியை சந்தித்துப் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்திருக்கிறார்.

திமுகவின் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என முக்கிய தலைவர்களுடன் தெய்வச்செயல் எடுத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ள நெட்டிசன்கள், ஆளுங்கட்சி நிர்வாகியாக இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாமா என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Tags: DMKA crime of God - an attempt to prey on the screaming woman DMK executives?கதறும் பெண்இளம்பெண்
Share
Tweet
SendShare
Previous Post

விண்ணில் ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட் தொழில்நுட்ப கோளாறு!

Next Post

ராகுல் காந்தி குற்றச்சாட்டுக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் மறுப்பு!

Related News

அசிம் முனீரின் பிடியில் பாகிஸ்தான் எதிர்காலம் : இந்தியாவுக்கு ஆபத்தா? – சிறப்பு தொகுப்பு!

அடுத்தடுத்த சாதனைகள் படைக்க தயார் – இஸ்ரோ தலைவர் நாராயணன்

திருச்செங்கோடு அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதி 4 பேர் பலி!

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பூஜை – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

பதவியை ராஜினாமா செய்தால் சலுகைகளை ரத்து செய்ய கோரிய வழக்கு – மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த 6 விமானங்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

தற்கொலை படை தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 25 பேர் பலி – பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் பொறுப்பேற்பு!

நாட்டின் விண்வெளித் திட்டத்திற்கு புதிய வலிமை – பிரதமர் மோடி பாராட்டு!

இமயமலை பகுதியில் உள்ள மாநிலங்களில் பனிச்சரிவு அபாயம் – மத்திய அரசு ஆய்வு!

கண்ணனின் புல்லாங்குழல் இசையைப் போல நம் வாழ்விலும் இனிமை நிறைந்திடட்டும் – நயினார் வாழ்த்து!

லைக் போட்டால் திருப்பதி லட்டு – தமிழக இளைஞர் குறித்து திருப்பதி கோயில் அதிகாரிகள் விசாரணை!

மோட்டார் ஸ்போர்ட்ஸ் உள்கட்டமைப்பு – முதல்வர் விஜய்க்கு நடிகர் அஜித் வாழ்த்து!

திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கி இருந்த விவகாரம் – வங்க தேசத்தை சேர்ந்த 23 பேருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை!

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த விவகாரம் – திருப்பதி ஏழுமலையான் கோயில் துணை நிர்வாக அதிகாரி கைது!

இது போருக்கான காலம் அல்ல : இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு ஜெலென்ஸ்கி வரவேற்பு!

ஜிஎஸ்எல்வி எஃப்-17 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இஓஎஸ்-5 செயற்கைக்கோள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies