கொரோனா பரவல் குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சீனா, சிங்கப்பூர், தாய்லாந்து உள்ளிட்ட சில நாடுகளில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்தியாவிலும் கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் 257 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று கட்டுக்குள் உள்ளதாகவும், கோவிட் தொற்று பாதிப்பால் நாடு முழுவதும் 257 பேர் சிகிச்சையில் உள்ளதாகவும் கூறியுள்ளது.
மேலும் கொரோனா பரவல் குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும். தற்போதைய சூழலை அரசு உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் தெரிவித்திருக்கிறது.