கேரளாவில் 12 மாவட்டங்களுக்குப் பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு முன்னதாகவே வருகிற 27-ம் தேதி தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் அங்குப் பல மாவட்டங்களில் தற்போதே மழை பெய்யத் தொடங்கியிருக்கிறது.
குறிப்பாக கோழிக்கோடு, வயநாடு கண்ணூர், காசர்கோடு ஆகிய 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், பத்தினம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம் ஆகிய 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.