சூரிய ஒளி மருந்து தெளிப்பான் : பில்கேட்ஸ் வியந்து பாராட்டிய விவசாயி மகன்!
May 22, 2025, 12:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

சூரிய ஒளி மருந்து தெளிப்பான் : பில்கேட்ஸ் வியந்து பாராட்டிய விவசாயி மகன்!

Web Desk by Web Desk
May 21, 2025, 09:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மகாராஷ்டிரா மாநிலத்தில் சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்த இளைஞர் ஒருவரின் கண்டுபிடிப்பு உலகப் பணக்காரர்களில் ஒருவரான பில்கேட்சையே வியப்படையச் செய்துள்ளது. அப்படி என்ன கண்டு பிடிப்பு ? அதனை கண்டுபிடித்தது யார் என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஒரே நேரத்தில் பரந்து பட்ட பயிர்களுக்கு மருந்து தெளிக்கும் வசதியோடு பயன்படுத்துவதற்கும் எளிமையாக இயக்கும் வகையில் தயாரிக்கப்பட்ட சூரிய ஒளி மருந்து தெளிப்பான் தான் இது. உலக நாடுகளே வியந்து பார்க்கும் இந்த மருந்து தெளிப்பானை உருவாக்கியதன் பின்னணியில் மகாராஷ்டிரா மாநிலத்தில் சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்து பொறியியல் பயின்ற இளைஞரின் அபாரத் திறமையும், வலியும் நிறைந்திருக்கிறது.

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் யோகேஷ் காவேண்டே கல்லூரி பயின்ற 2014-2015 கால கட்டம் அது. விவசாயத்தை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கும் யோகேஷின் குடும்பத்தில் மூத்த சகோதரர் பூச்சிக் கொல்லி மருந்தால் ஏற்பட்ட பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். மொத்த குடும்பமும் துயரத்தில் ஆழ்ந்த அந்த நேரத்தில் எங்களுக்காக எதாவது செய் எனத் தந்தை சொன்ன வார்த்தைகள் தான் யோகேஷுன் திறமைக்கு அடிப்படையாக அமைந்தது.

அவுரங்காபாத்தில் உள்ள கல்லூரியில் இந்தியப் பொறியியல் முதலாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த போது வேளாண் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுக்கான பணியைத் தொடங்கினார். யோகேசுக்கு ஆதரவாக அவருடைய நண்பர்களும் களமிறங்கிய நிலையில் நியோ என்ற அமைப்பையும் உருவாக்கினர். கல்லூரியின் இறுதி ஆண்டுக்காகத் தயாரிக்கப்பட்ட சக்கர தெளிப்பான் கருவியைக் கல்லூரி நிர்வாகமோ, பேராசிரியர்களோ அங்கீகரிக்கும் வரை காத்திருக்காமல், நேரடியாக விவசாயிகளிடம் சென்று காட்சிப்படுத்தினர்.

அதன் தொடர்ச்சியாகக் கல்லூரி படிப்பு முடிந்த பின்பு சக்கர மருந்து தெளிப்பான் தயாரிப்பில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட யோகேஷ் மற்றும் அவரது குழுவினருக்குப் பொருளாதார வசதி மிகப்பெரிய தடையை ஏற்படுத்தியது. அப்போது யோகேஷின் தயாரிப்புக்குப் பாரதிய யுவ சக்தி அறக்கட்டளை உதவ முன்வந்தது. ஒரு வருடத்திற்கான ஊதியத்தை வழங்கி உறுதுணையாக இருந்த அந்த அறக்கட்டளை, யோகேஷின் தயாரிப்பை மேம்படுத்தவும் பக்கபலமாக இருந்தது.

அந்த அறக்கட்டளையின் உதவியோடு வங்கியிலிருந்து சுமார் 5 லட்சம் கடனாகப் பெற்ற யோகேஷ் தன் தயாரிப்பை முன்பைவிட வேகமாக முன்னெடுத்த போது தான் மற்றொரு யோசனையும் தோன்றியது. சக்கர அடிப்படையிலான தெளிப்பானைச் சூரிய சக்தியின் மூலமாக இயங்கும் தெளிப்பானாக மாற்றுவது தான் அந்த யோசனை.  அதற்கான தொழில்நுட்பத்தைக் கண்டறிந்த யோகேசுக்கு குறுகிய காலத்திலேயே அதற்கான அங்கீகாரமும் கிடைத்தது.

குறிப்பாக, பெண் விவசாயிகள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்ட இந்த மருந்து தெளிப்பான் உலக பணக்காரர்களில் ஒருவரான பில்கேட்சின் கவனத்தையும் ஈர்த்தது. புதுடெல்லிக்கு அவர் வருகை தந்திருந்த போது இந்த மருந்து தெளிப்பானை அவரே இயக்கிப் பார்த்தது அதற்கான ஆதரவைத் தெரிவித்ததால்,  12 ஆயிரத்திற்கும் அதிகமான விவசாயிகள் பயன்படுத்தும் அளவிற்கு இந்த சக்கர மருந்து தெளிப்பானின் பரிமாணம் வளர்ச்சியடையத் தொடங்கியுள்ளது.

வளர்ச்சியை மட்டுமே அடுத்தடுத்து கண்டு கொண்டிருந்த யோகேசுக்கு கோவிட் தொற்று காலம் பெரும் சவால் மிகுந்த சூழலை உருவாக்கியது. இருப்பினும் மனம் தளராமல் தங்களின் வணிகத்தைத் தொடர்ந்த யோகேஷ் மற்றும் குழுவினருக்கு, வாடிக்கையாளர்களும் ஆதரவளிக்கத் தொடங்கினர். அதிலும் பில்கேட்ஸின் அங்கீகாரம் கிடைத்ததிலிருந்து இந்த மருந்து தெளிப்பானின் தேவையும் பன்மடங்கு அதிகரிக்கத் தொடங்கியது. பண்ணை இயந்திர மற்றும் சோதனை நிறுவனத்தால் அங்கீகாரம் பெற்றுள்ள இந்த சூரிய ஒளி மருந்து தெளிப்பான் மத்திய அரசின் மானியங்களுக்கும் தகுதியுடைவையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சூரிய ஒளி மருந்து தெளிப்பானை வாங்கும் விவசாயிகளுக்கு 40 முதல் 50 சதவிகிதம் வரை மானியம் வழங்கப்படுகிறது.  உலகளாவிய சந்தைக்குத் தனது தொழில்நுட்பத்தை விரிவுபடுத்த முடிவெடுத்த யோகேஷ் ஆப்பிரிக்க நாடுகளில் கவனம் செலுத்தி வரும் நிலையில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் இந்த திட்டத்தை எடுத்துச் செல்வதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

சாதாரண விவசாய குடும்பம் ஒன்றில் ஏற்பட்ட துயரச் சம்பவத்தின் போது உதித்த சிந்தனை, உலக நாடுகளே வியக்கும் அளவிற்கான சாதனையைப் படைத்துள்ளது. இளம் தொழில் முனைவோர் முன்னேறுவதைப் பொறுத்துத் தான் இந்திய விவசாயத்தின் எதிர்காலம் அமையும் என்பதில் திடமாக இருக்கும் யோகேஷ், வேளாண்மைத்துறையில் சாதிக்கத் துடிக்கும் ஒவ்வொரு இளைஞருக்கும் முன்னோடியாகத் திகழ்கிறார்.

Tags: Solar sprayer: Farmer's son praised by Bill Gatesபில்கேட்ஸ்விவசாயி மகன்சூரிய ஒளி மருந்து தெளிப்பான்மகாராஷ்டிரா
ShareTweetSendShare
Previous Post

பாகிஸ்தான் தூதரகத்தில் பார்ட்டி : ISI ஏஜென்ட்டாக செயல்பட்ட யூ டியூபர் கைதின் பின்னணி – சிறப்பு கட்டுரை!

Next Post

இணையத்தில் வறுபடும் ராகுல் : பாகிஸ்தான் எதிர்க்கட்சி தலைவரானது எப்படி?

Related News

இணையத்தில் வறுபடும் ராகுல் : பாகிஸ்தான் எதிர்க்கட்சி தலைவரானது எப்படி?

பாகிஸ்தான் தூதரகத்தில் பார்ட்டி : ISI ஏஜென்ட்டாக செயல்பட்ட யூ டியூபர் கைதின் பின்னணி – சிறப்பு கட்டுரை!

வனத்துறை அலட்சியம் : வயிற்றில் குட்டியுடன் உயிரிழந்த யானை!

பாக்.கை தொடர்ந்து வங்கதேசம் : பிடியை இறுக்கும் இந்தியா – சீண்டினால் சிக்கல் உறுதி

இந்தியா வீழ்த்திய சீன ஏவுகணை : தொழில்நுட்பத்தை அறிய ஆர்வம் காட்டும் நாடுகள்!

பாக். உளவு அமைப்புடன் தொடர்பில் இருந்த 6 பேர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

சூரிய ஒளி மருந்து தெளிப்பான் : பில்கேட்ஸ் வியந்து பாராட்டிய விவசாயி மகன்!

தமிழக பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது திமுக அரசின் கடமை : அண்ணாமலை

நேஷனல் ஹெரால்ட் வழக்கு விசாரணை : சோனியா, ராகுல் காந்தியின் கோரிக்கையை நிராகரித்தது டெல்லி நீதிமன்றம்!

ED பெயரை கேட்டாலே திமுகவினருக்கு தூக்கம் வருவதில்லை : நயினார் நாகேந்திரன்

அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாத ஆகாஷ் பாஸ்கரன்!

சென்னை : லாரியை கடத்திய நபர் செல்போன் கடையில் தகராறு!

டாஸ்மாக் பொது மேலாளர் சங்கீதா அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜர்!

ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கிய ஈட்டி எறிதல் வீரர்!

கர்நாடகா : அடுத்தடுத்து நிகழ்ந்த கோர விபத்து – 6 பேர் உயிரிழப்பு!

தெலங்கானா : லாரி மீது கார் மோதி விபத்து : 3 பேர் உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies