ஒரே நாடு ஒரே தேர்தல் நாட்டு மக்களைப் பாதுகாப்பதற்காகப் பிரதமர் மோடி கொண்டு வந்த மிகப் பெரிய திட்டம் என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னை திருவான்மியூரில் பேசியவர்,
பவன் கல்யாணம் இங்கே வந்திருப்பது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி என்றும் ஒரே நாடு ஒரே தேர்தல் பாரத பிரதமரின் கனவு என்று அவர் குறிப்பிட்டார்.
இன்றைய காலகட்டத்தில் ஒரு தேர்தல் நடந்தால் 10,000 கோடி செலவும் மாநில தேர்தலுக்கு 1000 கோடி செலவு செய்ய வேண்டியிருக்கிறது என அவர் கூறினார்.
அந்த பணம் மக்களின் நன்மைக்குச் செலவு செய்தால், ஒரே நாடு ஒரே தேர்தல் இந்த நாட்டு மக்களைப் பாதுகாக்கும் என்றும் ஒரு குடும்பத்தில் அடிக்கடி குழந்தை பெற்றால் ஒரு வீட்டின் நிதிநிலை எப்படி இருக்குமோ அது போலத் தான் ஒவ்வொரு முறை தேர்தல் வந்தால் நிதிநிலை பாதிக்கும் என தமிழிசை சௌந்தரராஜன் கூறினார். ஒரே நாடு ஒரே தேர்தல் நடந்தால் நம் நாடு பலம் பெறும் என அவர் குறிப்பிட்டார்.