திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பலத்த காற்று வீசுவதால், பாதுகாப்பு கருதி நட்சத்திர ஏரியில் படகு சவாரி சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
கொடைக்கானல் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது.
இதனால், நட்சத்திர ஏரியில் படகு சவாரி சேவை நிறுத்தி வைக்கப்பட்டது. படகு சவாரி செய்ய ஆர்வத்துடன் வந்த சுற்றுலாப் பயணிகள் இதனால் ஏமாற்றம் அடைந்தனர்.