சென்னை தேனாம்பேட்டை அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் பைக் மெக்கானிக் பரிதாபமாக உயிரிழந்தார்.
கரிமேடு பகுதியைச் சேர்ந்த அழகேசன் பைக் மெக்கானிக்காக பணியாற்றி வந்துள்ளார். இருசக்கர வாகனத்தில் அவர் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, தேனாம்பேட்டை நரசிம்மா சாலை அருகே வேகமாக வந்த மற்றொரு இருசக்கர வாகனம் அவர் மீது மோதியது.
இதில் தலையில் பலத்த காயமடைந்த அழகேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மதுபோதையில் விபத்தை ஏற்படுத்திய சரவணன் என்பவரைக் கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.