ரஷ்ய அதிபர் விளாடிமர் புதின் பயணித்த ஹெலிகாப்டரை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட குர்ஸ்க் பகுதியைப் பார்வையிடக் கடந்த 20-ம் தேதி ரஷ்ய அதிபர் விளாடிமர் புதின் உயர்ரக ஹெலிகாப்டரில் பயணித்துள்ளார்.
அப்போது அவர் சென்ற ஹெலிகாப்டரை வழிமறித்து சில ட்ரோன்கள் தாக்க முயன்றதாகத் தகவல் வெளியானது. இந்நிலையில், இது தொடர்பாக விளக்கமளித்துள்ள ரஷ்ய அரசு ட்ரோன் தாக்குதல் நடந்ததை உறுதிப்படுத்தியுள்ளதுடன், வலிமையான வான் பாதுகாப்பு அமைப்பின் உதவியுடன் ட்ரோன் தாக்குதல் முறியடிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
இருப்பினும் அதிபர் புதின் சென்ற ஹெலிகாப்டர் மீதான ட்ரோன் தாக்குதலை உக்ரைன் ராணுவம் உறுதிப்படுத்தவில்லை என்றாலும், சமீப நாட்களாக உக்ரைன் மீதான ட்ரோன் தாக்குதலை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ரஷ்யா ராணுவம் கடுமையாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.