அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது ஆறுதல் அளிப்பதாகவும், அவருக்கு வழங்கப்படும் தண்டனை மிக கடுமையானதாக இருக்க வேண்டும் என்றும் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர், தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு நிலை வருத்தமளிப்பதாக கூறினார். பரீட்சை முடிவுக்கு காத்திருப்பதுபோல் பாலியல் வழக்கு தீர்ப்புக்கு காத்திருக்கும் நிலை ஏற்பட்டதாகவும், 5 மாதங்களில் கிடைத்த தீர்ப்பு ஆறுதல் அளிப்பதாகவும் அவர் கூறினார்.
பாலியல் குற்றம் செய்துவிட்டு தனது பெண் குழந்தைகளுக்கு சலுகை கேட்பதை எப்படி ஏற்பது? என்றும், பாலியல் குற்றம் மீண்டும் நடக்காததுபோல் தண்டனை இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.ஞானசேகரனுக்கு பின்னணியில் இன்னும் யாரெல்லாம் உள்ளார்கள் என்ற சந்தேகம் எழுவதாகவும் தமிழிசை தெரிவித்தார்.