கேரள கூட்டுறவு வங்கி மோசடி வழக்கில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.
திருச்சூர் மாவட்டம் கருவன்னூரில் உள்ள கூட்டுறவு வங்கி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது. வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்குவதாக கூறி இந்த வங்கியில் 180 கோடி ரூபாய் மோசடி நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது குறித்து அமலாக்கத்துறையும் விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், அமலாக்கத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெயரும் இடம் பெற்றுள்ளது. அந்த கட்சியை சேர்ந்த 27 பேர் மீது அமலாக்கத்துறை குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
இந்தியாவில் அரசியல் கட்சி ஒன்றின் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது இது 2வது முறையாகும். முன்னதாக, டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஆம்ஆத்மி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.