தாய்லாந்து பூங்காவில் செல்பி எடுக்க முயன்ற இந்தியரை புலி தாக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாய்லாந்து பூங்காவில் புலிகளுடன் செல்பி எடுப்பது என்பது வழக்கமாக இருந்து வருகிறது. தாய்லாந்தின் ஸ்ரீராசா உயிரியல் பூங்காவில் புலிகளுடன் செல்பி எடுக்க சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படும் நிலையில், இந்தியர் ஒருவர் புலியுடன் செல்பி எடுக்க முயன்றுள்ளார்.
பூங்காவின் பாதுகாவலரின் உதவியுடன் செல்பி எடுக்க முயன்றபோது திடீரென புலி ஆக்ரோஷத்துடன் அந்த நபரைத் தாக்கியுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.