பாட்டாளி மக்கள் கட்சி தனிநபர் சொத்து அல்ல, என்று அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அன்புமணி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் பேசியவர்,
பாட்டாளி மக்கள் கட்சி என்பது தனி நபர் சொத்து அல்ல என்றும் பாமக பொதுக்குழுவில் முறையாகக் கட்சியின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டேன் என்று அன்புமணி குறிப்பிட்டார்.
ராமதாஸ் கொள்கைகளை நிறைவேற்றக் களத்தில் இறங்கி பணியாற்றுவோம் என்றவர் உங்களில் ஒருவனாகவும், பாமக தொண்டனாகவும் இறங்கி வேலை செய்வேன் என அன்புமணி கூறினார்.
பாமகவைச் சேர்ந்த நமக்குள் வேற்றுமைகள் என்பது இருக்கக் கூடாது என்று அன்புமணி தெரிவித்தார்.