கர்நாடக மாநிலம் மங்களூருவில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கி தீவிரமாகப் பெய்து வருகிறது. இந்த நிலையில், மங்களூருவில் வெளுத்து வாங்கிய கனமழையால், நிலச்சரிவு ஏற்பட்டு, வீடு இடிந்து விழுந்தது.
அப்பகுதியில், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.