கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் தடையை மீறிக் குளிக்கும் சுற்றுலாப் பயணிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தென்மேற்கு பருவமழை காரணமாகக் கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது.
இதனால் கோதையாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் திற்பரப்பு அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஆர்ப்பரித்துச் செல்லும் வெள்ளநீரால் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தடையை மீறி அருவியின் மேல்பகுதியில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதாகப் புகார் எழுந்துள்ளது. தற்போது இதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.