திண்டுக்கல் மாவட்டம் பழனி பேருந்து நிலையம் முறையாகப் பராமரிக்கப்படுவதில்லை எனப் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
பிரசித்தி பெற்ற பழனி தண்டாயுதபாணி கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோயிலுக்கு வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் அனைவரும் புதிய பேருந்து நிலையத்தையே பயன்படுத்துகின்றனர்.
இந்த பேருந்து நிலையத்திலிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் பேருந்து நிலையம் முறையாகப் பராமரிக்கப்படுவதில்லை எனப் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் எந்தவொரு அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை என அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.