ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில் 2 கோடியே 10 லட்சம் ரூபாய் சிக்கியது.
தலைமைப் பொறியாளர் பைகுந்த நாத் சாரங்க் தொடர்புடைய 7 இடங்களில் ஒடிசா லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர்.
இதில், புவனேஸ்வரில் உள்ள வீட்டில் இருந்து ஒரு கோடியும், அங்குலில் உள்ள வீட்டில் இருந்து 1 கோடியே 10 லட்சம் ரூபாயும் கைப்பற்றப்பட்டது.