அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தேமுதிக பொருளாளர் சுதீஷ் சந்தித்துப் பேசினார்.
2024 மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையில் தேமுதிக இடம்பெற்ற கூட்டணியும், பாஜக தலைமையில் பாமக இடம்பெற்ற கூட்டணியும் தனித்தனியாகப் போட்டியிட்டன.
இந்த நிலையில், கூட்டணி பேச்சுவார்த்தையின்போது தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்படுவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தாா். மாநிலங்களவை உறுப்பினர் பதவி தொடர்பாக நேரடியாக அறிவிக்கப்படவில்லை.
தங்களுக்கு உறுதியளித்தபடி மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ஒதுக்க வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தும் கூறியிருந்தார்.
மேலும், மாநிலங்களவை இடம் தொடர்பாக ஏற்கனவே ஒப்பந்தம் போடப்பட்டதாகத் தகவல் வெளியான நிலையில் திடீர் சந்திப்பு நடந்துள்ளது.