கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் முகக்கவசம் அணியத் தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் தலைதூக்கத் தொடங்கியுள்ளது. அந்த வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகக்கவசம் அணியத் தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிவதன் மூலம் கொரோனா பரவலைத் தடுக்க முடியும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
உடல்நிலை சரியில்லாதவர்கள் வீடுகளிலேயே இருக்கவும், தடுப்பூசி செலுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் கொரோனா பரவலைக் கண்காணிக்கவும் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.