தமிழக அரசுப் பணிகளிலிருந்து இன்று ஒரே நாளில் 8 ஆயிரத்து 144 பேர் ஓய்வு பெறுகின்றனர்
.
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் தற்போது வரை 9 லட்சத்து 42 ஆயிரத்து 941 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இவர்களில் 60 வயதை எட்டும் ஊழியர்கள் ஆண்டு தோறும் மே மாதங்களில் பணியில் இருந்து ஓய்வு பெறுவது வழக்கம்.
அந்த வகையில் இந்த ஆண்டு ஓய்வு வயதை எட்டிய 8 அயிரத்து 144 பேர் இன்று ஒரே நாளில் பணியில் இருந்து ஓய்வு பெறுகின்றனர்.
அதில் குரூப்-ஏ பணியிடங்களில் இருந்த 424 பேரும், குருப் – பி பணியிடங்களில் பணியாற்றிய 4 ஆயிரத்து 399 பேரும், சி பிரிவில் இருந்து ஆயிரத்து 136 பேரும் இன்று ஓய்வு பெறுகின்றனர்
ஒரே நாளில் 8 ஆயிரத்து 144 அரசு ஊழியர்கள் ஓய்வு பெறுவதால் அரசு சேவை பாதிக்கப்படுவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.