இரண்டு லட்சத்திற்கும் குறைவான தங்க நகைக் கடன்களுக்கான ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளிலிருந்து விலக்கு அளிக்கும் முடிவு வரவேற்கத்தக்கது என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் தனிப்பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தங்க நகைக் கடன் தொடர்பான ரிசர்வ் வங்கியின் வரைவு வழிகாட்டுதல்களில் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை, மத்திய அரசு நிறைவேற்றியுள்ளதாகப் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
2 லட்சத்துக்கும் குறைவான தங்க நகைக் கடன்களுக்கான ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளிலிருந்து விலக்கு அளிக்கும் முடிவு வரவேற்கத்தக்கது என்றும் அவர் கூறியுள்ளார்.
மத்திய அரசின் இந்த முடிவால் ஏராளமான மக்கள் பயன்பெறுவார்கள் எனக் குறிப்பிட்டுள்ள எல்.முருகன், மக்களின் எண்ணங்களை ஏற்றுச் செயல்படும் அரசு என்பதைப் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மீண்டும் உறுதி செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.