பஹல்காம் தாக்குதல் மூலமாகப் பெண் சக்திக்குச் சவால் விடப்பட்டது, இறுதியில் பயங்கரவாதிகளுக்கு மிக ஆபத்தான முடிவைத் தேடித் தந்துள்ளதாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளுக்குப் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், பெண்களின் வளர்ச்சிக்கு பாஜக ஆட்சியில் முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகத் தெரிவித்தார்.
பாஜக ஆட்சியில் லட்சக்கணக்கான பெண்கள் தங்கள் வீடுகளுக்கு உரிமையாளர்கள் ஆக்கப்பட்டிருப்பதாகப் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.