பஹல்காம் தாக்குதல் மூலமாகப் பெண் சக்திக்குச் சவால் விடப்பட்டது, இறுதியில் பயங்கரவாதிகளுக்கு மிக ஆபத்தான முடிவைத் தேடித் தந்துள்ளதாக, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் தத்தியா, சத்னா விமான நிலையங்கள் உட்பட ஆயிரத்து 300 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளுக்குப் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
இதைத்தொடர்ந்து விழாவில் உரையாற்றிய அவர், பெண்களின் வளர்ச்சிக்கு பாஜக ஆட்சியில் முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகத் தெரிவித்தார்.
பாஜக ஆட்சியில் லட்சக்கணக்கான பெண்கள் தங்கள் வீடுகளுக்கு உரிமையாளர்கள் ஆக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
பஹல்காம் தாக்குதலின்போது இந்தியர்கள் ரத்தம் மட்டும் சிந்தவில்லை, பெண் சக்திக்குச் சவால் விடப்பட்டதாகவும் கூறிய பிரதமர் மோடி, அதுதான் பயங்கரவாதிகளுக்கு மிக ஆபத்தான முடிவைத் தேடித் தந்துள்ளதாகத் தெரிவித்தார்.