மக்களுக்கு நன்மை செய்யாமல் மத்திய அரசை குறை சொல்வதே முதலமைச்சர் ஸ்டாலினின் வாடிக்கை என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுரையில் கால்வாய்களை துணி வைத்து அடைத்ததுதான் திராவிட மாடல் ஆட்சி என தெரிவித்துள்ளார். திமுக பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக-வை குறைத்து மதிப்பிட்டு பேசுவது சரியானதல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.
மத்திய அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி திமுக கொடுப்பதாகவும், அனைத்து திட்டங்களையும் வாங்கிக்கொண்டு மத்திய அரசை குறை கூறுவது தமிழக அரசின் வாடிக்கையாக உள்ளதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதனிடையே உடுமலைப்பேட்டையில் மஹாராஷ்டிரா ஆளுநர் சிபி.ராதாகிருஷ்ணனை மரியாதை நிமித்தமாக சந்தித்ததாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
விழாவில், முன்னாள் நகராட்சி தலைவர் ஜோதீஸ்வரி கந்தசாமி பாஜக திருப்பூர் தெற்கு மாவட்டத் தலைவர் திருமதி. முனைவர் @bjpmpriya அவர்களும், கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தாகவும் அவர் கூறியுள்ளார்.