தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 840 கோடி ரூபாய் மதிப்பிலான நெல்மணிகள் வீணானதாக ஆர்டிஐ மூலம் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் 2019 முதல் 2024 வரை நேரடி கொள்முதல் மையங்கள் மற்றும் கிடங்குகளில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 3.72 மெட்ரிக் டன் நெல் மற்றும் அரிசி வீணாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் 65 ஆயிரம் முதல் ஒரு லட்சத்து 25 லட்சம் டன் நெல் மற்றும் அரிசி வீணானதாகவும், குறிப்பாக திருவாரூர், தஞ்சை, நாகை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இழப்புகள் அதிகமாக இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் போதிய பராமரிப்பு வசதிகள் இல்லாததால் நெல்மணிகள் வீணாகி வருவதாகவும், சேமித்து வைக்கப்படும் நெல்மணிகளில் காணப்படும் பூச்சிகள் மற்றும் நெல்மூட்டைகளை அலட்சியமாக கையாள்வதால்
இழப்பு ஏற்படுவதாகவும் ஆர்டிஐ தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.