மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தர்பூசணி பழங்களுக்கு போதிய விலை கிடைக்காததால் நிலத்திலேயே அழிக்கப்பட்டது.
கருமாத்தூர், கேசவம்பட்டியில் 15 ஏக்கர் பரப்பளவில் தர்பூசணி பயிரிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், போதிய விலை கிடைக்காததால் பழங்கள் நிலத்திலேயே அழிக்கப்பட்டது. சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மக்களும் தர்பூசணி பழங்களை அள்ளிச் சென்றனர்.