பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் இந்தியாவும், பராகுவேவும் தோளோடு தோள் நிற்பதாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் சாண்டியாகோ பெனா பலாசியோஸ், டெல்லியில் பிரதமர் மோடியைச் சந்தித்தார்.
அப்போது பேசிய பிரதமர் மோடி, சைபர் கிரைம், போதைப்பொருள் கடத்தல் போன்ற சவால்களை எதிர்த்து போராடவும், ஒத்துழைப்பு வழங்கவும் இரு நாடுகள் இடையே அபரிமிதமான சாத்தியங்கள் உள்ளதாகத் தெரிவித்தார்.