மனிதாபிமானமற்ற தீய சக்திகளின் மொத்த உருவம் தான் திராவிடியன் ஸ்டாக் என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா விமர்சித்துள்ளார்.
சென்னை சாலிகிராமத்தில் “பரமசிவன் பாத்திமா” திரைப்படத்தை பார்த்த பின் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்,
தீய சக்திகளின் உருவம் தான் திராவிடியன் ஸ்டாக்ஸ் என்றும் 1890களில் நடைபெற்ற மண்டைக்காடு கலவரத்தை “பரமசிவன் பாத்திமா” திரைப்படம் வெளிக்காட்டுகிறது என எச். ராஜா கூறினார்.
மதமாற்றம் முழுமையாக தடைசெய்யப்பட வேண்டியதை இப்படம் உணர்த்துகிறது என்றும் பழனி முருகன் மாநாட்டில் நிறைவுரை ஆற்றியவர் இந்து விரோதி உதயநிதி ஸ்டாலின் என எச்.ராஜா குறிப்பிட்டார்.
ஒருவரின் மதத்தை மாற்ற முயற்சிப்பது தீயசக்திகள் செய்யும் செயல் என்றும் மனிதாபிமானமற்ற தீய சக்திகளின் ஒட்டுமொத்த உரை என அவர் கூறினார்.