வரும் 15ம் தேதி நடைபெற இருந்த முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது.
நாடு முழுவதும் வரும் 15-ம் தேதி நீட் தேர்வு நடத்தப்படும் எனத் தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியம் அறிவித்தது. மேலும், நீட் முதுநிலை தேர்வானது இரண்டு தவணையாக நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள், நீட் முதுநிலை தேர்வை ஒரே தவணையாக நடத்த உத்தரவு பிறப்பித்தனர்.
இந்த நிலையில், தேர்வு நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்யக் கூடுதல் அவகாசம் தேவைப் படுவதால், ஜூன் 15-ம் தேதி நடைபெற இருந்த நீட் முதுநிலை தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.