ஆன்லைன் விளையாட்டுகளுக்குத் தமிழக அரசு விதித்த நேரக் கட்டுப்பாடு விதிகள் செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இணைய வழி விளையாட்டுகளை நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை விளையாடுவதற்கு அனுமதிக்கக் கூடாது எனத் தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து விளையாட்டு நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
இது தொடர்பான வழக்கை நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது தமிழக அரசு விதித்த நேரக் கட்டுப்பாடு விதிகள் செல்லும் எனத் தீர்ப்பளித்தனர்.
மேலும் அரசின் விதிகளுக்கு எதிராக விளையாட்டு நிறுவனங்கள் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.