ஞானசேகரனின் CDR ஆதாரத்தை வெளியிட்ட அண்ணாமலை!
Aug 20, 2026, 02:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஞானசேகரனின் CDR ஆதாரத்தை வெளியிட்ட அண்ணாமலை!

Murugesan M by Murugesan M
Jun 3, 2025, 07:06 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கில், விடை தெரியாத பல கேள்விகள் இன்னமும் எஞ்சியிருப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

ஞானசேகரனின் Call Detail Record ஆதாரங்களை வெளியிட்டுப் பல கேள்விகளை எழுப்பியுள்ள அண்ணாமலை, திமுக அரசு யாரைக் காப்பாற்றத் துடிக்கிறது என வினவியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில்,

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் பல விடை தெரியாத
கேள்விகள், இன்னமும் எஞ்சியிருக்கின்றன என்று  அண்ணாமலை கூறியுள்ளார்.

டிச. 23-ம் தேதி இரவு பாலியல் வன்கொடுமை நடந்தது என்றும் டிச. 24-ம் தேதி ஞானசேகரனைக் கைது செய்து பிறகு வெளியே விட்டுவிடுகிறார்கள் என்றும் டிச.25-ம் தேதி மாலை மீண்டும் ஞானசேகரனை போலீசார் கைது செய்கின்றனர் என அண்ணாமலை குறிப்பிட்டார்.

சம்பவம் நடந்த போது ஞானசேகரனின் செல்போன் ஏரோபிளேன் மோடில் தான் இருந்தது
என்றும் டிச. 23ம் தேதி இரவு 8.52 வரை ஏரோபிளேன் மோடில் இருந்த ஞானசேகரனின் செல்போனில் இருந்து இரவு 8.55-க்கு பிறகு காவல்துறை அதிகாரிக்கு அழைப்பு செல்கிறது என கூறியவர், ஞானசேகரனுடன் பேசிய காவல்துறை அதிகாரி செல்போனில் இருந்து
இரவு 9.01 மணிக்கு மீண்டும் ஞானசேகரன் செல்போனுக்கு அழைப்பு செல்கிறது என  அண்ணாமலை தெரிவித்தார்.

குற்றம் செய்த பிறகு ஞானசேகரன் பேசக்கூடிய முதல் ஆளாக காவல்துறை அதிகாரி ஒருவர் இருக்கிறார் என்றும் 48 மணி நேரம் கழித்து ஞானசேகரனுடன் பேசிய காவல்துறை
அதிகாரியின் பெயரை வெளியிடுவேன் என அண்ணாமலை திட்டவட்டமாக தெரிவித்தார்.

ஞானசேகரனுக்கும் போலீஸ் அதிகாரிக்கும் என்ன தொடர்பு என்று விசாரணை நடைபெற்றதா? – என அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

டிச.24-ம் தேதி காலை 7.17 மணிக்குத் தொடங்கி மாலை 4.01 மணி வரை 5 முறை ஞானசேகரனும் திமுக வட்ட செயலாளர் கோட்டூர் சண்முகமும் செல்போனில் பேசினார்கள் என்று தெரிவித்தவர், திமுக வட்ட செயலாளர் கோட்டூர் சண்முகத்துடன் செல்போனில் பேசிய பிறகே ஞானசேகரனை கோட்டூர்புரம் காவல்நிலையம் அழைத்துச் செல்கின்றனர் என அண்ணாமலை கூறினார்.

டிச. 24-ம் தேதி கைது செய்யப்பட்ட ஞானசேகரன் எதற்காக வெளியே விடப்பட்டார்?, ஆதாரங்களை அழிக்கவா?  என்று  அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.

“டிச.24-ம் தேதி இரவு 8.30 மணிக்கு ஞானசேகரன் கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் இருந்து
வெளியே வந்தபிறகு அமைச்சர் மா.சுப்பிரமணியனும் திமுக வட்ட செயலாளர் கோட்டூர் சண்முகமும் செல்போனில் பேசுகிறார்கள் என்றும் திமுக நிர்வாகி கோட்டூர் சண்முகமும், அண்ணா பல்கலை.யில் வேலை செய்யும் நடராஜனும் 4 நாட்களில் 13 முறை தொலைபேசியில் பேசியுள்ளனர் என்று அண்ணாமலை தெரிவித்தார்.

SIT பதிவு செய்த 11 வழக்குகளில் ஒன்று ஆதாரங்கள் அழிக்கப்பட்டதற்கான பிரிவு என்றும்  என்ன ஆதாரங்கள் அழிக்கப்பட்டன என்று தெரியவில்லை என அண்ணாமலை கூறினார்.

ஞானசேகரன் மீது மே 14-ம் தேதி பதிவு செய்யப்பட்ட மற்றொரு பாலியல் வழக்கின் நிலை என்ன என்று தெரியவில்லை என அண்ணாமலை கூறினார். கோட்டூர் சண்முகத்திடம் செல்போனில் பேசிய காவல்துறை அதிகாரி, அமைச்சர் மா.சுப்பிரமணியனை விசாரிக்காதது ஏன்?  என அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

Tags: bjp k annamalaiannauniversity issueAnnamalai releases Gnanasekaran's CDR evidence
Share
Tweet
SendShare
Previous Post

அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை : யார் அந்த சார்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

Next Post

ஆன்லைன் விளையாட்டு : தமிழக அரசின் விதிகள் செல்லும் – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

Related News

சென்னையில் நாளை தென்மாநில முதலமைச்சர்கள் கூட்டம்; அமித் ஷா பங்கேற்பு

மின்கடத்தி கொள்முதல் முறைகேடு – 50க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அரசு வாகனம் – முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

பால் கொள்முதல் விலை உயர்வு – பேரவையில் முதல்வர் அறிவிப்பு!

மருத்துவக் காப்பீட்டுத் தொகை ஆண்டுக்கு 25 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் – முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

நெல்லை மாவட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் நீட் தேர்வில் வெற்றி – மருத்துவ கல்லூரியில் படிக்க வாய்ப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

2027க்குள் 50 புதிய வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் : காத்திருக்கும் புதிய அனுபவம் : நீண்ட தூர ரயில் பயணிகளுக்கு SURPRISE வசதிகள் – சிறப்பு தொகுப்பு!

சீனாவின் கடல் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி : Sea Guardian ட்ரோன்களை குத்தகைக்கு எடுத்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

பாஜகவில் புதிய அணியை களமிறக்கிய நிதின் நபின் : அனைத்து சமூகங்களுக்கும் சமவாய்ப்பு – சிறப்பு தொகுப்பு!

எப்போது பேச வேண்டும், எப்படி பேச வேண்டும், என்ன பேச வேண்டும் என்பது தெரியும் – முதல்வர் விஜய் பேச்சு!

மதுரையில் பூசாரி உயிரிழந்த விவகாரம் – உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்!

அரசு நிகழ்ச்சிகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதை யாரும் தடுக்கவில்லை – உயர் நீதிமன்றம்

தமிழகத்தில் முதற்கட்டமாக 500 விளையாட்டு மைதானங்கள் தரம் உயர்த்தப்படும் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

தென்மாநில முதலமைச்சர்கள் மாநாடு: இன்று சென்னை வருகிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா!

கோவையில் பாஜக சார்பில் தேசிய கொடி பேரணி; நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு

இந்திய பாதுகாப்புத்துறையின் GAME CHANGER ‘பிரம்மோஸ்-NG’ – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies