அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கில், விடை தெரியாத பல கேள்விகள் இன்னமும் எஞ்சியிருப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ஞானசேகரனின் Call Detail Record ஆதாரங்களை வெளியிட்டுப் பல கேள்விகளை எழுப்பியுள்ள அண்ணாமலை, திமுக அரசு யாரைக் காப்பாற்றத் துடிக்கிறது என வினவியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில்,
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் பல விடை தெரியாத
கேள்விகள், இன்னமும் எஞ்சியிருக்கின்றன என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
டிச. 23-ம் தேதி இரவு பாலியல் வன்கொடுமை நடந்தது என்றும் டிச. 24-ம் தேதி ஞானசேகரனைக் கைது செய்து பிறகு வெளியே விட்டுவிடுகிறார்கள் என்றும் டிச.25-ம் தேதி மாலை மீண்டும் ஞானசேகரனை போலீசார் கைது செய்கின்றனர் என அண்ணாமலை குறிப்பிட்டார்.
சம்பவம் நடந்த போது ஞானசேகரனின் செல்போன் ஏரோபிளேன் மோடில் தான் இருந்தது
என்றும் டிச. 23ம் தேதி இரவு 8.52 வரை ஏரோபிளேன் மோடில் இருந்த ஞானசேகரனின் செல்போனில் இருந்து இரவு 8.55-க்கு பிறகு காவல்துறை அதிகாரிக்கு அழைப்பு செல்கிறது என கூறியவர், ஞானசேகரனுடன் பேசிய காவல்துறை அதிகாரி செல்போனில் இருந்து
இரவு 9.01 மணிக்கு மீண்டும் ஞானசேகரன் செல்போனுக்கு அழைப்பு செல்கிறது என அண்ணாமலை தெரிவித்தார்.
குற்றம் செய்த பிறகு ஞானசேகரன் பேசக்கூடிய முதல் ஆளாக காவல்துறை அதிகாரி ஒருவர் இருக்கிறார் என்றும் 48 மணி நேரம் கழித்து ஞானசேகரனுடன் பேசிய காவல்துறை
அதிகாரியின் பெயரை வெளியிடுவேன் என அண்ணாமலை திட்டவட்டமாக தெரிவித்தார்.
ஞானசேகரனுக்கும் போலீஸ் அதிகாரிக்கும் என்ன தொடர்பு என்று விசாரணை நடைபெற்றதா? – என அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.
டிச.24-ம் தேதி காலை 7.17 மணிக்குத் தொடங்கி மாலை 4.01 மணி வரை 5 முறை ஞானசேகரனும் திமுக வட்ட செயலாளர் கோட்டூர் சண்முகமும் செல்போனில் பேசினார்கள் என்று தெரிவித்தவர், திமுக வட்ட செயலாளர் கோட்டூர் சண்முகத்துடன் செல்போனில் பேசிய பிறகே ஞானசேகரனை கோட்டூர்புரம் காவல்நிலையம் அழைத்துச் செல்கின்றனர் என அண்ணாமலை கூறினார்.
டிச. 24-ம் தேதி கைது செய்யப்பட்ட ஞானசேகரன் எதற்காக வெளியே விடப்பட்டார்?, ஆதாரங்களை அழிக்கவா? என்று அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.
“டிச.24-ம் தேதி இரவு 8.30 மணிக்கு ஞானசேகரன் கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் இருந்து
வெளியே வந்தபிறகு அமைச்சர் மா.சுப்பிரமணியனும் திமுக வட்ட செயலாளர் கோட்டூர் சண்முகமும் செல்போனில் பேசுகிறார்கள் என்றும் திமுக நிர்வாகி கோட்டூர் சண்முகமும், அண்ணா பல்கலை.யில் வேலை செய்யும் நடராஜனும் 4 நாட்களில் 13 முறை தொலைபேசியில் பேசியுள்ளனர் என்று அண்ணாமலை தெரிவித்தார்.
SIT பதிவு செய்த 11 வழக்குகளில் ஒன்று ஆதாரங்கள் அழிக்கப்பட்டதற்கான பிரிவு என்றும் என்ன ஆதாரங்கள் அழிக்கப்பட்டன என்று தெரியவில்லை என அண்ணாமலை கூறினார்.
ஞானசேகரன் மீது மே 14-ம் தேதி பதிவு செய்யப்பட்ட மற்றொரு பாலியல் வழக்கின் நிலை என்ன என்று தெரியவில்லை என அண்ணாமலை கூறினார். கோட்டூர் சண்முகத்திடம் செல்போனில் பேசிய காவல்துறை அதிகாரி, அமைச்சர் மா.சுப்பிரமணியனை விசாரிக்காதது ஏன்? என அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.