ஞானசேகரனின் CDR ஆதாரத்தை வெளியிட்ட அண்ணாமலை!
Oct 22, 2025, 05:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஞானசேகரனின் CDR ஆதாரத்தை வெளியிட்ட அண்ணாமலை!

Web Desk by Web Desk
Jun 3, 2025, 07:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கில், விடை தெரியாத பல கேள்விகள் இன்னமும் எஞ்சியிருப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

ஞானசேகரனின் Call Detail Record ஆதாரங்களை வெளியிட்டுப் பல கேள்விகளை எழுப்பியுள்ள அண்ணாமலை, திமுக அரசு யாரைக் காப்பாற்றத் துடிக்கிறது என வினவியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில்,

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் பல விடை தெரியாத
கேள்விகள், இன்னமும் எஞ்சியிருக்கின்றன என்று  அண்ணாமலை கூறியுள்ளார்.

டிச. 23-ம் தேதி இரவு பாலியல் வன்கொடுமை நடந்தது என்றும் டிச. 24-ம் தேதி ஞானசேகரனைக் கைது செய்து பிறகு வெளியே விட்டுவிடுகிறார்கள் என்றும் டிச.25-ம் தேதி மாலை மீண்டும் ஞானசேகரனை போலீசார் கைது செய்கின்றனர் என அண்ணாமலை குறிப்பிட்டார்.

சம்பவம் நடந்த போது ஞானசேகரனின் செல்போன் ஏரோபிளேன் மோடில் தான் இருந்தது
என்றும் டிச. 23ம் தேதி இரவு 8.52 வரை ஏரோபிளேன் மோடில் இருந்த ஞானசேகரனின் செல்போனில் இருந்து இரவு 8.55-க்கு பிறகு காவல்துறை அதிகாரிக்கு அழைப்பு செல்கிறது என கூறியவர், ஞானசேகரனுடன் பேசிய காவல்துறை அதிகாரி செல்போனில் இருந்து
இரவு 9.01 மணிக்கு மீண்டும் ஞானசேகரன் செல்போனுக்கு அழைப்பு செல்கிறது என  அண்ணாமலை தெரிவித்தார்.

குற்றம் செய்த பிறகு ஞானசேகரன் பேசக்கூடிய முதல் ஆளாக காவல்துறை அதிகாரி ஒருவர் இருக்கிறார் என்றும் 48 மணி நேரம் கழித்து ஞானசேகரனுடன் பேசிய காவல்துறை
அதிகாரியின் பெயரை வெளியிடுவேன் என அண்ணாமலை திட்டவட்டமாக தெரிவித்தார்.

ஞானசேகரனுக்கும் போலீஸ் அதிகாரிக்கும் என்ன தொடர்பு என்று விசாரணை நடைபெற்றதா? – என அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

டிச.24-ம் தேதி காலை 7.17 மணிக்குத் தொடங்கி மாலை 4.01 மணி வரை 5 முறை ஞானசேகரனும் திமுக வட்ட செயலாளர் கோட்டூர் சண்முகமும் செல்போனில் பேசினார்கள் என்று தெரிவித்தவர், திமுக வட்ட செயலாளர் கோட்டூர் சண்முகத்துடன் செல்போனில் பேசிய பிறகே ஞானசேகரனை கோட்டூர்புரம் காவல்நிலையம் அழைத்துச் செல்கின்றனர் என அண்ணாமலை கூறினார்.

டிச. 24-ம் தேதி கைது செய்யப்பட்ட ஞானசேகரன் எதற்காக வெளியே விடப்பட்டார்?, ஆதாரங்களை அழிக்கவா?  என்று  அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.

“டிச.24-ம் தேதி இரவு 8.30 மணிக்கு ஞானசேகரன் கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் இருந்து
வெளியே வந்தபிறகு அமைச்சர் மா.சுப்பிரமணியனும் திமுக வட்ட செயலாளர் கோட்டூர் சண்முகமும் செல்போனில் பேசுகிறார்கள் என்றும் திமுக நிர்வாகி கோட்டூர் சண்முகமும், அண்ணா பல்கலை.யில் வேலை செய்யும் நடராஜனும் 4 நாட்களில் 13 முறை தொலைபேசியில் பேசியுள்ளனர் என்று அண்ணாமலை தெரிவித்தார்.

SIT பதிவு செய்த 11 வழக்குகளில் ஒன்று ஆதாரங்கள் அழிக்கப்பட்டதற்கான பிரிவு என்றும்  என்ன ஆதாரங்கள் அழிக்கப்பட்டன என்று தெரியவில்லை என அண்ணாமலை கூறினார்.

ஞானசேகரன் மீது மே 14-ம் தேதி பதிவு செய்யப்பட்ட மற்றொரு பாலியல் வழக்கின் நிலை என்ன என்று தெரியவில்லை என அண்ணாமலை கூறினார். கோட்டூர் சண்முகத்திடம் செல்போனில் பேசிய காவல்துறை அதிகாரி, அமைச்சர் மா.சுப்பிரமணியனை விசாரிக்காதது ஏன்?  என அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

Tags: bjp k annamalaiannauniversity issueAnnamalai releases Gnanasekaran's CDR evidence
ShareTweetSendShare
Previous Post

அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை : யார் அந்த சார்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

Next Post

ஆன்லைன் விளையாட்டு : தமிழக அரசின் விதிகள் செல்லும் – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

Related News

நாகை : தொடர் கனமழையால் 1000 ஏக்கர் குறுவை நெற்பயிர்கள் பாதிப்பு!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் நாளை கந்த சஷ்டி விழா – யாக சாலை பூஜையுடன் தொடக்கம்!

திருப்பத்தூர் : பாலாற்றில் வெள்ளப்பெருக்கு – பக்தர்களை மீட்ட தீயணைப்புத்துறையினர்!

தஞ்சையில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்!

ஈரோடு : தள்ளுபடி துணிகளை வாங்க குவிந்த வரும் மக்கள்!

குற்றால அருவிகளில் குளிக்க 6வது நாளாக சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்க வரி விதிப்பை புதிய வாய்ப்பாக மாற்றிய இந்தியா : பிற நாடுகளுக்கு ஏற்றுமதியை அதிகரித்து துணிச்சல் முயற்சி!

அதிநவீன கப்பல்களை தயாரித்து வரும் “கொச்சி ஷிப்யார்டு” : தன்னிறைவு நோக்கில் இந்திய கடற்படை ஓர் புது அத்தியாயம்…!

அதிகரிக்கும் புற்றுநோய் பாதிப்பு : சானிடைசர்களுக்குத் தடை – ஐரோப்பிய ஒன்றியம் முடிவு?

350 கி.மீ., வேகத்தில் ரயில்கள் பறக்கும் : அறிமுகமாகிறது VANDE BHARAT 4.O!

சீனாவை சீண்டும் தைவான் : உள்நாட்டு சவால்களை சந்திக்க முடியாமல் திணறல்!

கனடாவில் இந்தியர்களுக்கு பாதுகாப்பு இல்லை : இந்திய தூதர் சொல்வது என்ன?

AWS கோளாறால் முடங்கியது இணைய உலகம் : செயலிகள் செயலிழப்பு – பயனர்கள் பரிதவிப்பு!

பிரான்ஸ் அதிபரை கோபத்தில் ஆழ்த்திய துணிகர கொள்ளை – நெப்போலியனின் நூற்றாண்டு பொக்கிஷம் மீட்கப்படுமா?

இஸ்ரேல்-காசா எல்லையை பிரிக்கும் மஞ்சள் கோடு : மக்களின் உயிரை பறிக்கும் ஆபத்தாக மாறிய சோகம் !

கடல் அரசன் INS விக்ராந்தில் பிரதமர் மோடி : கடற்படை வீரர்களுடன் தீபாவளி கொண்டாட்டம்…!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies