நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 26 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு மராட்டியத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் தலா ஒருவர் என மொத்தம் 5 பேர் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தனர்.
அதேநேரம் ஒரே நாளில் 512 பேர் பெருந்தொற்றில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். கொரோனா தொற்று குறித்துக் கவலைப்படத் தேவையில்லை என அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.