ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில், உளவு பார்த்ததாகக் கைது செய்யப்பட்ட அரசு ஊழியர் ஷாகூர் கானுக்கு 7 நாள் போலீஸ் காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவர் பல முறை பாகிஸ்தானுக்குச் சென்று வந்த நிலையில், அங்கு ஐஎஸ்ஐ அமைப்பினரைச் சந்தித்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஜெய்ப்பூர் நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்புடன் ஷாகூர் கான் முன்னிறுத்தப்பட்ட நிலையில், காவல்துறையினர் அவரை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க ஒப்புதல் அளித்தது.