அண்ணா பல்கலை வழக்கு விசாரணையின் முழுமைத் தன்மை மீது சந்தேகம் உள்ளதாக பாஜக மாநில தலைவர் கருத்து தெரிவித்துள்ளார்.
நெல்லையில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்,
அண்ணா பல்கலை வழக்கு விசாரணையின் முழுமைத்தன்மை மீது சந்தேகம் உள்ளதாகவும், சிறப்புப் புலனாய்வு விசாரணையிலிருந்த குளறுபடிகளை திமுக மறைக்க நினைத்தது என்று நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டினார்.
அண்ணா பல்கலை வழக்கை சிபிஐ விசாரித்தால் மட்டுமே உண்மை வெளிவரும் என்றும் வழக்கில் குற்றப்பத்திரிகையைச் சரியாகத் தாக்கல் செய்தால்தான் நீதி கிடைக்கும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.