குன்னூர் எம்ஆர்சி முகாமில் பயிற்சி முடித்த 551 ராணுவ வீரர்கள் பகவத்கீதை, குரான், பைபிள், உப்பு ஆகியவற்றின் மீது கை வைத்து சத்தியப்பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.
இந்திய ராணுவத்தில் உள்ள பல்வேறு ராணுவ முகாம்களில் நீலகிரி மாவட்டம், குன்னூரில் உள்ள எம்ஆர்சி ராணுவ முகாம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இந்த ராணுவ முகாமில் தென் மாநிலங்களில் இருந்து தேர்வு செய்யப்படும் இளைஞர்களுக்கு 31 வாரங்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்நிலையில், குன்னூர் ராணுவ முகாமில் 31 வாரம் பயிற்சி முடித்த ராணுவ வீரர்கள் சத்தியப்பிரமாணம் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராணுவ அதிகாரிகள், வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டனர்.
பின்னர் நடந்த நிகழ்ச்சியில், பயிற்சி முடித்த 551 ராணுவ வீரர்கள் பகவத்கீதை, குரான், பைபிள், உப்பு ஆகியவற்றின் மீது கை வைத்து சத்தியப்பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.