புதுக்கோட்டைப் பழைய பேருந்து நிலையம் அருகே 35 அடி உயரத்தில் வைக்கப்பட்டிருந்த பிரதமர் மோடியின் பேனரை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றியதால் பதற்றம் நிலவியது.
பஹல்காம் தாக்குதலில் பாகிஸ்தானுக்குத் தக்க பதிலடி கொடுத்த இந்திய ராணுவ வீரர்கள் மற்றும் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் புதுக்கோட்டையில் கடந்த 30ஆம் தேதி மாவட்ட பாஜக சார்பில் தேசியக் கொடி பேரணி நடைபெற்றது.
இதற்காக, புதுக்கோட்டைப் பழைய பேருந்து நிலையத்தில் பாஜக சார்பில் 35 உயரத்தில் பிரதமர் மோடியின் பேனர் வைக்கப்பட்டது. ராணுவ வீரர் உடையில் வைக்கப்பட்டிருந்த பிரதமர் மோடியின் பேனரைப் புதுக்கோட்டை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கிழித்தெறிந்து வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.
புதுக்கோட்டைப் பழைய பேருந்து நிலைய பகுதிகளில் இருந்த பல்வேறு பேனர்களை அகற்றாமல் பிரதமர் மோடியின் பேனர் மட்டும் அகற்றப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.