ஐபிஎல் வெற்றி கொண்டாட்டத்திற்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வருவார்கள் என்று தெரிந்தும் காங்கிரஸ் அரசு அலட்சியமாக இருந்ததாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் வெற்றிக் கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர்.
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக, ஆர்சிபி வீரர்களுடன் ரீல்ஸ் எடுப்பதிலேயே கர்நாடகா முதலமைச்சர், துணை முதலமைச்சர் கவனம் செலுத்தியதாகவும் விமர்சித்துள்ளது.