அனுபவமற்ற ஓட்டுநர்களால் ஆபத்து : விபத்து அபாயத்தால் பயணிகள் அச்சம்!
Jul 25, 2025, 08:19 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அனுபவமற்ற ஓட்டுநர்களால் ஆபத்து : விபத்து அபாயத்தால் பயணிகள் அச்சம்!

Web Desk by Web Desk
Jun 5, 2025, 07:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நெல்லை மாநகரப்பகுதிகளில் முன் அனுபவமற்ற ஓட்டுநர்களால் இயக்கப்படும் தனியார் பேருந்துகளால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அத்தகைய பேருந்துகள் அச்ச உணர்வுடனேயே பயணிக்கும் பயணிகள் குறித்தும், தனியார் பேருந்துகளுக்கு விதிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்தும் இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.

திருநெல்வேலி மாநகராட்சி என்பது  டவுனில் தொடங்கி பாளையங்கோட்டை, மகாராஜா நகர் வரை பரந்து விரிந்துள்ள பகுதிகளை உள்ளடக்கியதாகும். நீண்ட நெடிய வழித்தடத்தில் அரசுப் பேருந்துகள் மட்டுமின்றி ஏராளமான தனியார் பேருந்துகளும் இயங்கி வருகின்றன.

பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவ, மாணவியர்கள், வேலைக்குச் செல்வோர் என நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இப்பேருந்துகளில் பயணம் செய்து வருகின்றனர். அத்தகைய தனியார் பேருந்துகள் முன் அனுபவமற்ற ஓட்டுநர்களை வைத்து இயக்கப்படுவது அதில் பயணிக்கும் பொதுமக்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.

தனியார் பேருந்துகளை இயக்கும் அனுபவமற்ற ஓட்டுநர்கள், குறிப்பிட்ட நேரத்திற்குள் இலக்குகளை அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் அதிவேகத்துடன் பேருந்துகளை இயக்குவதாகவும், சக பேருந்துகளை முந்திச் செல்வதில் ஆர்வம் காட்டுவதாகவும் புகார் எழுந்துள்ளது. அவசரத்தில் பேருந்து நிலையங்களைப் பேருந்துகளை நிறுத்தாமல் செல்வதும், பயணிகள் இறங்குவதற்கு முன்பாகவே பேருந்துகளை இயக்குவதும் அதில் பயணிக்கும் பொதுமக்களுக்கு அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது

பேருந்துகளை இயக்குவதற்கு வகுக்கப்பட்டிருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளைத் துளியளவும் பின்பற்றாத ஓட்டுநர்கள் மீதும், அதனைத் தடுக்க தவறிய நடத்துனர்கள் மீதும் பொதுமக்கள் அடுக்கடுக்கான புகார்களை எழுப்பத் தொடங்கியுள்ளனர்.

நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பயணிக்கும் பேருந்துகளுக்கு முன் அனுபவமற்ற ஓட்டுநர்களையும், நடத்துனர்களையும் நியமிக்கும் தனியார் பேருந்து நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருக்கும் பொதுமக்கள், தனியார் பேருந்துகளைக் குழு அமைத்து அரசு கண்காணிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags: பயணிகள் அச்சம்Danger from inexperienced drivers: Passengers are afraid due to the risk of accidents
ShareTweetSendShare
Previous Post

குப்பைமேடான பள்ளப்பட்டி பூங்கா : மதுப்பிரியர்களின் கூடாரமாக மாறியதால் மக்கள் அதிர்ச்சி!

Next Post

ரேஷன் கடைகளில் புதிய நடைமுறை : அத்தியாவசிய பொருட்களை பெற முடியாமல் மக்கள் தவிப்பு!

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

50 பேருடன் மாயமான ரஷ்ய விமானம் : உடைந்த பாகங்கள் மீட்பு – பயணிகள் நிலை என்ன?

மோசடியில் புது ரூட் : போலி தூதரகம் தொடங்கி பணம் சுருட்டிய கில்லாடி!

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.96 கோடி அம்போ… : ரவுடிகளின் ராஜ்ஜியமான ஈரடுக்கு பேருந்து நிலையம்!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

தமிழக பெண்கள் திமுக அரசின் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள் : அண்ணாமலை

கழிவறையில் ரேஷன் கடையின் அரிசி மூட்டைகள் : திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

எடப்பாடி பழனிசாமிக்கு இந்து முன்னணி கண்டனம்!

முதலமைச்சர் ஸ்டாலின் நலமுடன் உள்ளார் – மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை!

இரண்டு குழந்தைகளை கொன்ற அபிராமிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை!

திமுக  ஆட்சியில் உடனடி சிகிச்சை என்பது ஏழை எளியோருக்கு எட்டாக்கனியாகவே இருக்கிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

மீன்பிடி தடை கால நிவாரணம் உயர்த்தி வழங்கப்படும் – எடப்பாடி பழனிசாமி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies